Thursday, November 22, 2012

கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்


         இனிய உறவுகளே!  மாவீரர்கள் நினைவு  வாரமாக இம்மாதம் 21 முதல்27 வரை  போற்றப்படுவதை , ஒட்டி முன் நான், ஈழம் பற்றி எழுதிய கவிதைகள் மீள் பதிவாக தினம் ஒன்று வெளிவரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்


ஏடெடுத்தேன் கவிஎழுத நெஞ்சில் வந்தே-அந்த
ஈழத்து கொடுமையது துயரம் தந்தே
பாடெடுத்த பாடுயென இங்கே அதனை-நான்
படைத்திட்டேன படியுங்கள நீரும் இதனை
ஓடெடுத்து தெருத்தெருவாய் பிச்சை கேட்டே-பக்சே
ஓடிவர கண்டுமனம் மகிழ்ந்து பாட்டே
தேடிவரும் தீந்தமிழில் எடுத்துச் சொல்ல-வெற்றி
தேடிவரும் தனிஈழம் காண்போம் வெல்ல

பால்மணமே மாறாத குழந்தை கூட-பக்சே
பாவியவன் படையாலே சாவை நாட
காலிழந்தார் கரமிழந்தார் கண்ணும் இழந்தார்-மேலும்
கணக்கற்றோர் மடிந்தீழ மண்ணில வீழ்ந்தார்
தாலிதனை இழந்திட்ட தாய்மார் சாபம்-துயர்
தணியாத ஈழத்து மறவர் கோபம்
கூலியென கொடுத்திடுமே அழிவாய் நீயும்-பெரும்
கொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்

இளம்பெண்கள் கற்பிழந்தார் உனதுப் படையால்-ஈவு
இரக்கமெனும் குணமில்லா அரக்க நடையால்
வளமிக்க வன்னிகா டழிந்தே போக-நீ
வான்வழியே குண்டுமழை பெய்து ஏக
களமறவர் எம்தமிழர் விடுதலைப் புலிகள்-அந்தோ
கண்மூடி பலியாக சிங்கள எலிகள்
உளமகிழ கூத்தாடும் நிலையும் கண்டோம்-கண்ணீர்
உதிரமென உதிர்கின்ற நிலையே கொண்டோம்

இனிஒன்றாய் வாழ்வதற்கே இயலா தென்றே-அவர்
எண்ணித்தான் முடிவாக எதிர்த்து அன்றே
தனிநாடாய் ஈழத்தை பிரியு மென்றார்-ஆனால்
தரமறுக்க ஆயுதத்தை ஏந்தச் சென்றார்
நனிநாடும் உலகத்தில் உரிமைப் போரே-எங்கும்
நடத்தாமல் பெற்றாரா சொல்லும் யாரே
கனியிருக்க காயுண்ணும் மடையர் இல்லை-ஈழம்
காணாமல் இனியுறக்கம் இல்லை இல்லை


                                       புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. வலிகளை மறைக்கவும் மறக்கவும் முயற்சிப்போம்...
    மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துவதால் வலியே மிஞ்சுகிறது ஐயா..

    நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும்

    ReplyDelete
  2. கலங்க வைக்கும் வரிகள்..

    மீள் பதிவு - நன்றி ஐயா...

    ReplyDelete
  3. உங்களின் ஆழ்மனது ஏக்கம்
    உரிமையான தமிழரின் தாக்கம்
    இனி கிடைத்திடும் இனியசொர்க்கம்-அதுவே
    ஈழத்து மக்களின் இன்ப உலகம்

    ReplyDelete
  4. படித்து மனம் நொந்தேன்.

    ReplyDelete
  5. கனத்த பொருள் கொண்ட கவிதை..
    மனதையும் பிசைந்துவிட்டது பெருந்தகையே..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...