Thursday, May 28, 2015

கோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்கத் தயங்காதே!



ஓடி,ஓய்வெனில் விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல,
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு!
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்கத் தயங்காதே!


இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பிடப் பெருமை உளம்பூண

புலவர் சா இராமாநுசம்

20 comments :

  1. //முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
    முயன்றால் வெற்றி அவ்வினையாம்
    அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
    அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!//

    நல்ல வரிகள்!
    த ம 2

    ReplyDelete
  2. அய்யா தங்கள் தளத்தில் என்னால் வாக்களிக்க முடியவில்லை. பல முறை முயற்சித்தும் முடியவில்லை.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.
    கவிதை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. "இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
    எண்ணி எதையும் செய்வாயே!
    செயற்கையைத் தேடி அலையாதே-நம்
    செந்தமிழ் பேச மறக்காதே!" என்பதையே
    நானும் கூறிவைக்க விரும்புகின்றேன்!

    ReplyDelete
  5. அருமை ஐயா நம்பிக்கையை விதைக்கும் வைர வரிகள்.
    தமிழ் மணம் முதலாவது.

    ReplyDelete
  6. #கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
    கொள்கையைக் காக்கத் தயங்காதே!#
    உங்கள் வரிகளைப் படித்து ,அதன்படி முயன்று த ம வாக்கைப் போட்டுட்டேன் :)

    ReplyDelete
  7. //முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
    முயன்றால் வெற்றி அவ்வினையாம்//
    அனைவரும் மனதில் பதிய வைக்கவேண்டிய வரிகள்
    அருமை ஐயா

    ReplyDelete
  8. செந்தமிழ் பேச மறக்காதே!
    முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
    முயன்றால் வெற்றி அவ்வினையாம்

    உண்மை அருமை ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  9. உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் உயர் கவிதை. எனினும் ' உண்மை பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு' என்னும் வரிகள் இன்றைய அரசியல் சூழலில் ஒத்துவருமா என்ற ஐயம் எழுகிறதே! -இராய செல்லப்பா

    ReplyDelete
  10. உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் உயர் கவிதை. எனினும் ' உண்மை பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு' என்னும் வரிகள் இன்றைய அரசியல் சூழலில் ஒத்துவருமா என்ற ஐயம் எழுகிறதே! -இராய செல்லப்பா

    ReplyDelete
  11. // இயற்கையை பேணிக் காப்பாயே - நன்கு
    எண்ணி எதையும் செய்வாயே...! //

    சிறப்பான வரிகள் ஐயா...

    ReplyDelete
  12. நல்ல வழியை நாடும்படி கூறும் தங்களின் அறிவுரை மிகவும் பொருத்தமானது. தற்போதைக்குத் தேவையானது.

    ReplyDelete
  13. "செயற்கையைத் தேடி அலையாதே-நம்
    செந்தமிழ் பேச மறக்காதே!"
    செந்தமிழை நினைவில் கொள்வோம்
    செம்மையுடன் செயல்படுவோம்
    (அய்யா! குழலின்னிசையும் அருள்கூர்ந்து நினைவு கொள்ள வேண்டுகிறேன். நன்றி)
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...