Monday, December 14, 2015

தாங்காது தாங்காது இயற்கைத் தாயே –உடன் தடுத்திடு வாராமல் தொத்து நோயே

தாங்காது  தாங்காது  இயற்கைத்   தாயே –உடன்
      தடுத்திடு   வாராமல்   தொத்து  நோயே
தூங்காத  விழியிரண்டின்  துணையக்  கொண்டும் விரைந்து
       தொலையாத  இரவுயென  துயரம்   மண்டும்
நீங்காத  என்றேதான்  நாளும்  பொழுதும்-அந்தோ
       நிலையான  நிலையாலே நெஞ்சுள்  அழுதும்
தேங்காது  கண்ணீரும்  சிந்து  கின்றோம்  -இயற்கைத்
      தேவியேயுன் திருவடி  தொழுது  நின்றோம்!

புலவர்  சா  இராமாநுசம் 



22 comments :

  1. தொற்று நோய் பரவாமல் உடனே காக்க வேண்டும் ஐயா...

    ReplyDelete
  2. உங்கள் வேண்டுதலில் நானும் பங்கேற்கிறேன் !

    ReplyDelete
  3. தேவையான வேண்டுதல்!

    பின்னூட்டம் அளிக்க அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தளத்தில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன். அதை சற்று கவனியுங்கள் அய்யா!
    த ம 4

    ReplyDelete
  4. எங்கள் பிரார்த்தனையும் அதுதான்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா தங்களது வேண்டுதல் நிறைவேறும் ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  6. மழைக்குப் பின் தோற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    எங்களின் நோக்கமும் இதுதான்... நிச்சயம் நிறைவேறும் த.ம8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. நல்லதே நடக்கட்டும் ஐயா
    தம +1

    ReplyDelete
  9. தொற்று நோய் பரவாமல் பேணுவோம்
    தொடருங்கள்

    ReplyDelete
  10. நல்லதோர் வேண்டுதல்.......

    ReplyDelete
  11. எங்கள் பிரார்த்தனையும் அதுதான் ஐயா...

    ReplyDelete
  12. பகிர்விற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...