Sunday, July 9, 2017

நிம்மதி நிம்மதி நிம்மதியே-நீயும் நிலையென இருப்பது எவ்விடமே






நிம்மதி  நிம்மதி நிம்மதியே-நீயும்
 நிலையென இருப்பது எவ்விடமே
எம்மதி கலங்கிப்  புலம்பிடவே-வரும்
   எண்ணங்கள் அறியா!  கலங்கிடவே
தம்மதி  இழந்தவர்  பலபேரே-தேடியே
  தவித்துமே  அலுத்தவர்  சிலபேரே
சம்மதம் இதவென  சொல்லிவிடு-உனக்கு
  சரியெனப் பட்டால் சாகவிடு

உனக்கே நிம்மதி இல்லையோ-ஐயம்
   உதிக்கிது என்னுள் !போக்கிடுவாய்
தனக்கு  மிஞ்சினால் தானமென-செல்லும்
    தத்துவம் தன்னை  நோக்கிடுவாய்
ஆண்டவர்   மனதிலும்  நீயில்லை-இன்று
     ஆள்வோர்  மனதிலும்  நீயில்லை
தாண்டவம் ஆடிடும்  நிம்மதியே-இதுவே
    தவறென பாடுது  என்மதியே!
 புலவர்  சா  இராமாநுசம்

7 comments :

  1. மன உலைச்சலை அழகாக கவிதை ஆக்கினீர்கள் ஐயா விரைவில் சரியாகும்.

    ReplyDelete
  2. நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் என்பது சாத்தியமாவது சிரமம்தான் அய்யா :)

    ReplyDelete
  3. மனதில் அமைதி நிலவட்டும் ஐயா.

    ReplyDelete
  4. ​நமக்குள்ளேயே இருக்கும் நிம்மதியை மீட்டெடுப்போம்.

    ReplyDelete
  5. அனைத்தும் நமக்குள்ளே...

    ReplyDelete
  6. எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...