Saturday, October 21, 2017

நன்றி நன்றி உறவுகளே-வாழ்த்தை நவின்றீர் அளவில் உறவுகளே!



நன்றி நன்றி உறவுகளே-வாழ்த்தை
நவின்றீர் அளவில் உறவுகளே
ஒன்றிய உளத்தொடு தொலைவழியே-பலரும்
உரைத்திட கசிந்தன இருவிழியே
குன்றென வாழ்வீர் என்நாளும் –ஏதும்
குறையின்றி வாழ்வீர் மேன்மேலும்
இன்றெனை வாழ்திய அனைவருக்கும்-என்றும்
இறைவன் அருள்தர வேண்டுகிறேன்


புலவர் சா இராமாநுசம்

8 comments :

  1. நன்றி நவிழலுக்கு நன்றி ஐயா.
    த.ம.பிறகு.

    ReplyDelete
  2. மகிழ்ச்சியும், நன்றியும் ஐயா.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  4. நன்றி எதற்கு அய்யா ,உங்களின் மன மகிழ்ச்சிக்கு என்றும்
    நானும் துணை நிற்பேன்:)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...