Showing posts with label ஈழப்பிரச்சினை அரசியல் கட்சிகள் காட்சிகள் கவிதை. Show all posts
Showing posts with label ஈழப்பிரச்சினை அரசியல் கட்சிகள் காட்சிகள் கவிதை. Show all posts

Friday, March 29, 2013

நம்பும் படியே இல்லையா-நம் நாட்டின் நடப்பு சொல்லையா!



 நம்பும்  படியே இல்லையா-நம்
   நாட்டின் நடப்பு  சொல்லையா!
 தும்பை விட்டு  வால்தன்னை-பிடித்து
  துரத்த நினைப்பது போலய்யா!

 விலகி விட்டோம் என்றொருவர் -ஈழம்
   வேண்டினார் அவையில் மற்றொருவர்
 இலவு  காத்த கிளிதானே -நம்
  ஈழ மக்கள்  நிலைதானே!

  மாணவர்  எழுச்சி  கண்டோமே-மனதில்
   மகிழ்ச்சி  நாமும் கொண்டோமே
 வீணல என்பதை  உணர்ந்தோமே-அவர்
  வீரத்தில் விளைந்த  தொண்டாமே!

 அணையா விளக்காய்  எரியட்டும்-ஈழம்
  அடைவோம்  உலகுக்கே  புரியட்டும்
 துணையாய் என்றும்  இருப்போமே-நம்
  தோளும் கோடுத்து சுமப்போமே!

 தேர்தல் விரைவில்  வந்திடுமே- அதுவும்
  தினமும் மாற்றம்  தந்திடுமே
 ஊர்தனில் இதனை உணர்த்திடுவீர்-கடந்த 
  உண்மைகள் தம்மை  உரைத்திடுவிர்!

 நாடகம் நடத்தும் கட்சிகளை -நாளும்
  நடக்கும் பற்பல  காட்சிகளை
ஊடக  வாயிலாய் உணர்வாரே- தம்
  உள்ளத்தில் பதித்து  கொள்வாரே!

             புலவர்  சா  இராமாநுசம்

 

  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...