Friday, December 12, 2014

சீண்டாதீர் நாளும் செய!



ஏற்றதுறை பற்றிமட்டும் ஆளும் அமைச்சர்
சாற்றுவது மட்டும் சரியாகும் !- மாற்றுங்கள்!
வேண்டாத வீண்பேச்சே வேதனைக்கு வித்தாமே
சீண்டாதீர் நாளும் செய!

புலவர்  சா  இராமாநுசம்

Thursday, December 11, 2014

பட்டுவிடும் ஒற்றுமையே பார்!



விழியேதும் இல்லான் விருப்பம்தான் காண!
வழியேதும்  இல்லாத ஒன்றே !– மொழியென்றா!
திட்டமிட்டே செய்கின்றார்! தேவையில்லை !செத்தமொழி
பட்டுவிடும் ஒற்றுமையே பார்!

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, December 9, 2014

பேறாகு மென்றேதான் பேசு!



சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயலேதான்!-தொல்லுலகில்!
மாறாத உண்மையது மாமேதை வள்ளுவர்சொல்
பேறாகு மென்றேதான் பேசு

புலவர்  சா  இராமாநுசம்

Monday, December 8, 2014

எண்ணையின்றி ஏற்ற விளக்கு!



வாழைக்கு தானீன்ற காய்கூற்றம் ஆமாபோல்
ஏழைக்கும் ஆயிற்றே வாக்குரிமை!- கோழையவன்,
மண்ணெண்ணை இல்லையென மத்தியிலே சொல்கின்றார்
எண்ணையின்றி ஏற்ற விளக்கு

புலவர்  சா  இராமாநுசம்