Sunday, September 6, 2015

மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் !

மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

கீழ் வரும் செய்தி உண்மையானால் அது ,என் போன்ற(வயது83)
மூத்த குடிமக்களுக்கு சலுகையா தண்டணையா இது ,முறையா? நியாமா!
என் போன்றோர் குடும்பத்தோடு (ஒரேயிடத்தில்) செல்வதுதானே பாதுகாப்பாகும்! இதுவரை நடைமுறையில் இருந்த இதனை மாற்ற முற்படுவதால் என்ன பயன்! இருந்த சலுகையைப் பறிப்பதா முன்னேற்றம்
அது மட்டுமல்ல, படுக்கை வசதிகூட மூத்த குடி மக்களுக்கு முன்னுரிமையாக
கீழ் படுக்கை களை ஒதுக்கும் பழைய நடைமுறை வசதியும் சத்தமின்றி நீக்கப்
பட்டுள்ளது
எனவே , காரணமின்றி காரியமாற்றும் நீதியற்ற இம் முறைகளை
தடுத்து ஆவனசெய்ய வேண்டுகிறேன்
பாதிக்கப்படும் மூத்த குடிமக்கள் சார்பாக வேண்டும்
புலவர் சா இராமாநுசம்

 
                        நாளேடு  தந்த  செய்தி
டெல்லி : ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், முழு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை, அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு, ரயில்களில் தற்போது சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படுகிறது. குடும்பத்தினருடன் செல்லும்போதும், இந்த சலுகை, அவர்களுக்கு கிடைக்கிறது. அடுத்தாண்டு முதல், இந்த திட்டத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. railway ticket counter இதன்படி, மூத்த குடிமக்கள், தங்கள் குடும்பத்தினருடன் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், தங்களுக்கான டிக்கெட்டை மட்டும் தனியாக எடுக்க வேண்டும். இப்படி எடுத்தால், சலுகை கட்டண வசதி கிடைக்கும். குடும்பத்தினருடன், தங்கள் பெயரையும் சேர்த்து, டிக்கெட் எடுத்தால், இந்த கட்டண சலுகையை பெற முடியாது. இதுகுறித்து, அனைத்து ரயில்வே மண்டலங்களின் தலைமை வர்த்தக மேலாளர்களுக்கு, கடந்த மாதம், 31 ஆம் தேதி, ரயில்வே வாரியம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது