Monday, February 1, 2016

முகநூல் பதிவுகள்!


பொதுவாக திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம்! காரணம் அது எல்லாநாட்டுகும் எல்லா மதங்கள், சமயங்களுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய கருத்துக்களை கொண்டிருப்பதே ஆகும் என்பர் !ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள சில குறள்களின் கருத்துகள் சில இக்காலத்திற்கும் சில நாடுகளுக்கும் பொருந்தாது எனவும் ஒரு சிலர் சொல்கிறார்களே! உங்கள் கருத்தென்ன!!!?

சாதரணமாய் மனித மனம் நடந்த பிழையை தான் ஏற்றுக் கொள்ளாமல் பிறர்மேல் சாற்றுவது நடை முறையாக உள்ளது! உதாரணமாக , ஒருவன் படி இடித்தது வலிக்கிறது என்கிறான்! ஆனால் ,உண்மையில் படிவந்தா இவனை இடித்தது! இல்லையே! இவனே , கவனிக்காமல் படியில் இடத்துக் கொண்டு, படி இடித்தது என்கிறான்! இதுபோலத்தான் வாழ்வில், சில நிகழ்வுகள்! நடக்கின்றன! ஆனால் யாரும் எண்ணிப் பார்பதில்லை!

காலமாற்றத்தால் கருத்துகளும் பழக்க வழக்களும் மாறத்தான் செய்யும் என்பது உண்மைதான்! அவை ,முதலில் கசந்தாலும் படிப்படியா நடைமுறையாக பழகித்தான் போகின்றன! முன்பெல்லாம் கணவன் பெயரைச்
சொல்லவே மனைவிமார் விரும்ப மாட்டார்கள்! ஆனால்!? இன்று! அப்படியா! தன் கணவன் பெயரைச் சொல்லி அழைப்பதையும் தாண்டி , வாடா, போடா ,என பேசிக் கொள்வதை பல குடும்பங்களில் பார்கிறோம்! அதுமட்டுமா இந்நிலை சினிமாவிலும் சீரியலிலும் சர்வ சாதரணமாகிட்டது ! வயதான என்னைப் போன்றவர் வருந்தினாலும் பயன் இல்லையே!

புலவர்  சா  இராமாநுசம்