Wednesday, May 18, 2016

போட்டாச்சி போட்டாச்சி ஓட்டே -இனியார் கேட்டாலும் கிடக்காது ஒட்டே!



போட்டாச்சி போட்டாச்சி ஓட்டே -இனியார்
கேட்டாலும் கிடக்காது ஒட்டே!
வாட்டாது வாழ்விக்கும் அரசே-அடுத்து
வருமென்று கொட்டுக முரசே!

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, May 15, 2016

வள்ளுவர் வாக்கு குறள் வழி நோக்கு!


உறவுகளே!
         வள்ளுவர் வாக்கு!

       கெடுதல் இரண்டு வகையில் வரும்! செய்யாத் தகாத செயலை செய்வதனாலும் வரும்! செய்ய வேண்டிய செயலைத் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாது விட்டாலும் வரும்
                               எனவே
        இச் செயலை இந்த வகையில் இவன் செய்வான் என்பதை ஆய்ந்து அச் செயலை அவனுக்குத் தருவது நன்று!
 

சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்! உங்களுப் புரிந்தால் சரி!

புலவர்  சா  இராமாநுசம்