Saturday, June 3, 2017

கவிக்கோ மறைவு! இரங்கல்பா!



எதிர்பாரா செய்தியது துடிக்க ஒன்றே-காலை
எழுந்தவுடன் இதயத்தை தாக்க இன்றே
கதிர்போல நேற்றுவரை ஒளியும் தந்தார்-ஏனோ
கவிக்கோ தன்னுடைய உயிரை ஈந்தார்
உதிரிப்பூ அல்லயவர்! கவிதை உலகில்-தமிழ்
உள்ளவரை மறையாது! புகழும் அலகில்


கபுலவர் சா இராமாநுசம்

Friday, June 2, 2017

ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்!



ஆறுவது சினமென்றே ஆன்றோர் சொன்னார்
அவ்வாறே தம்வாழ்வில் அவரும் நின்னார்!
மாறுவது மனிதகுணம்! அறிந்த உண்மை!
மாற்றமில்லை இன்றுவரை இந்தத் தன்மை
கூறுவது என்னவென ஆய்தே கூறும்!
குற்றமொடு சினம்கூட குறைந்து மாறும்!
தேறிவிடும்! தெளிவடையும் மனித குலமே
தேவையில்லா சாதிமதம் நீங்க நலமே!


புலவர் சா இராமாநுசம்