Monday, February 12, 2018

தமிழ்மணத்திற்குத் தாழ்மையான வேண்டுகோள்!





தமிழ்மணத்திற்குத் தாழ்மையான  வேண்டுகோள்
        தகவல்  இல்லை என்று  நாள்தோறும்  தகவல்
தர  காரணம்  என்ன? ஏதேனும்….?
        பொருளாதார சிக்கலா! தொழில் நூட்பக் கோளாறா இவ்வாறு
தடைப்பட்டு இருப்பதற்கு என்று!? புரியவில்லை! உரியவிளக்க மளித்தால்
அதற்கேற்ப நாங்கள்  செயல் படுவோம்
        உன் வரவு இல்லாமல்  வலைப்பதிவுலகமே இருண்டு
கிடக்கிறது ! யார் எழுதுகிறார்கள். என்ன எழுதுகிறார் என உன்  பட்டியலைப்
பார்த்து அறிந்து நாள்தோறும் பழகி விட்ட நாங்கள்  இன்று , கண்ணைக் கட்டி காட்டில் விட்டது  போலவும் திசை அறியாத  மாலுமி போலவும்
திகைத்து நிற்கிறோம்
        இந்நிலை நீடித்தால் வலைப்ப பதிவு உலகமே காணாமல்
போய்விடும்
         இதுவரை நீ ஆற்றிக் கொண்டிருக்கின்ற சேவைக்கு ஈடோ  இணையோ என்பது முற்றிலும்  உண்மை!
         அது தொடர இறைவனை  வேண்டுவதோடு .நீயும்
விரைந்து விளக்க மளிக்க  வேண்டுகிறோம்
 
புலவர்  சா  இராமாநுசம்