Thursday, March 24, 2016

கொள்கைகளை விற்றுவிட்டு கூட்டணியாம் இங்கே –அந்தோ கூறுபோட்டு சீட்டுகளை பிரிக்கின்றார் பங்கே!


கொள்கைகளை விற்றுவிட்டு கூட்டணியாம் இங்கே –அந்தோ
கூறுபோட்டு சீட்டுகளை பிரிக்கின்றார் பங்கே
எள்முனையும் மக்களுக்குச் சேவைசெய்யஅன் றாம் –கட்சிகள்
எண்ணுவது ! தேவையது ! பதவிசுகம் ஒன்றாம்!
உள்மனதில் ஓடுவது, இதுவென்றே அறிவீர் –மக்கள்
ஒன்றுபட்டு, தரமறிந்து வாக்குகளைத் தருவீர்!
முள்முனையில் கால்வைத்தால் என்னநிலை ஆகும்-என்றே
முன்கூட்டி சிந்தித்தால் துன்பமதும் போகும்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...