என்னதான் நடக்குது நாட்டினிலே –எடுத்து
எழுதிட இயலா ஏட்டினிலே
அன்னைதான் தெரசா நாடறியும் –அவர்
ஆற்றிய தொண்டே உலகறியும்
பொன்னைதான் பழிப்பது பித்தளையா –இழித்துப்
பேசுதல் ஐயகோ! பித்னையா
சின்னதாய் போவதோ சிலர்புத்தி – உடன்
சிந்தனைச் செய்வீர் ஆள்வோரே!
புலவர் சா இராமாநுசம்

