Showing posts with label அன்பு வள்ளுவர் வாக்கு கவிதை புனைவு. Show all posts
Showing posts with label அன்பு வள்ளுவர் வாக்கு கவிதை புனைவு. Show all posts

Saturday, August 5, 2017

அன்பெனப் படுவது யாதென அறிந்திட இன்புற வள்ளும் இயம்பன கேட்பீர்!



அன்பெனப் படுவது யாதென அறிந்திட
இன்புற வள்ளும் இயம்பன கேட்பீர்
அன்பிற் கில்லை அடைக்கும் தாளே
என்பும் தருவர்! சொல்லார் தமதென!
உடலும் உயிர்போல் அன்பும் வாழ்வும்
ஆர்வம் தந்தும் நட்பினைப் பெற்றும்
அறமோ மறமோ அதுவே துணையே
அன்பில் வாழ்வு பட்ட மரமே
அகத்தின் இயல்பே அன்பெனப் படுமே
அன்பின் வழியே உயிர்கள் இயங்க
இன்றெனில் உடம்பு எலும்பொடு போர்த்திய
ஒன்றென ஓதினார் வள்ளுவப் பெருந்தகை
நன்றென நானும் பாடலை முடித்தேன்!


புலவர் சா இராமாநுசம

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...