Showing posts with label அரசியல் அவலம் வேதனை தீருமா கவிதை புனைவு. Show all posts
Showing posts with label அரசியல் அவலம் வேதனை தீருமா கவிதை புனைவு. Show all posts

Thursday, May 14, 2015

நிதியிருந்தால் நீதிவிலை போகும் என்றே-மக்கள் நினைக்கின்றார்! ஐயகோ ! இதுவா? நன்றே


நிதியிருந்தால் நீதிவிலை போகும் என்றே-மக்கள்
நினைக்கின்றார்! ஐயகோ ! இதுவா? நன்றே
கதியில்லார் என்செய்வர்! காலம் முழுதும் –வற்றாக்
கண்ணீரே கதியென்று கதறி அழுதும்
விதியென்று வாடுவதும் அறமா!? ஆகும் –அவர்
விடுதலைக்கு ஏதுவழி! உயிர்தான் போகும்
மதியிழந்தோம் நாமெனவும் இதுவே சாட்சி –வீணில்
மக்களாட்சி என்பதெல்லாம் கனவுக் காட்சி


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...