இனியது கேட்பின் எனதரும் உறவே
இனிது இனிது இல்லற வாழ்வே
ஈட்டிய பொருளும் இணையில் மனைவியும்
வீட்டுடன் வசதியாய் அமைந்திடு மானால்
இனிது இனிது இல்லற வாழ்வ
இல்லற இல்லது நல்லறம் இல்லை
இணையில் வள்ளுவர் இயம்பிய வழியில்
மக்கள் செல்வம் ஆணென பெண்ணென
இரண்லடே போதும் இனிதென ஓதும்
இப்பெரு உலகில் இனியதே யாதும்
ஓப்பிலா என்றே செப்பிடல் ஒன்றே
இனிது இனிது இல்லற வாழ்வே!\\
புலவர் சா இராமாநுசம்

