ஆடிப் பட்டம் தேடி விதை –என்று
ஆன்றோர் சொன்னது பழைய கதை
இன்று
வாடிய முகத்தொடு வற்றிட வயலும் -கண்டே
வருந்திடும் உழவன் நெஞ்சில் புயலும்
ஓடிட வாழ வழிதனைக் காண!-அவனது
உள்ளமோ பல்வகை எண்ணங்கள் பூண
தேடியே போனான்! தெளிவுடன்! முடிவாக-உழவுத்
தொழிலையே மறந்தான் !வேற்றூர் !விடிவாக
புலவர் சா இராமாநுசம்

