Showing posts with label என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி ஆறு. Show all posts
Showing posts with label என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி ஆறு. Show all posts

Friday, September 20, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி-ஆறு





                இலண்டன்(-3-8-2013)

    இனிய உறவுகளே
சென்ற பதிவின் இறுதியில்  கண்ட  படமானது  இலண்டன்  ஐ என்று
சொல்லப் படுகின்ற ( மிகமிக) மெதுவாக ஊர்ந்து  சுற்றும் இராட்சத  இராட்டினம் ஆகும் அது ஒரு சுற்றுவர  முப்பது  நிமிடங்களாகின்றன
அதில்  காணப்  படும் பல பெட்டிகளில் மக்கள் அது மெதுவாவே நகர்வதால்
விரைந்து இறங்கவும் வரிசையில் நிற்போர் பத்து, பதினைந்து வரை ஏறவும்
முடிகிறது மத்தியில் என்னைப்  போன்ற வயதானவர்கள் அமர (நாலுபேர்)
நீண்ட பலகையும்  உள்ளது அதில் ஏறினோம்

       மேலே செல்ல செல்ல  இலண்டன்  எழில் மிகு தோற்றம் படிப்படியாகத் தெளிவாகத் தெரிந்தது  இரவு எட்டு மணிக்குமேல்
தான் அங்கு கதிரவன் மறைவதால்  நகரின் நாலபக்கமும்  கண்டு அனைவரும் அங்கும் இங்கும்  ஓடி படமெடுத்தார்கள் நானும்  பட
மெடுக்க முயன்ற போது ஏமாற்றமே அடைந்தேன் .  காரணம்
என் புகைப்பட கருவியின் மின்விசை தீர்ந்துவிட்டது.

         உடல் சோர்வோடு , மனச் சோர்வும் சேர்ந்து விட, நான்
இருக்கையில் அமர்ந்தேன் ஆனாலும் அவ்வப்போது எழுந்து நின்றும் ஓரமாகச் சென்றும் கண்டு  இரசித்தேன் உச்சியில் சென்ற போது
நகரம் முழுவதும்  காண முடிந்தது  அடடா! என்ன  அழகு!
காலம் கழிய சுற்றும் முடிய  ஏறியவாறே அதை விட்டு  விரைந்து இறங்கினோம்

       அனைவரும்  ஒன்று சேர, மணி எட்டு !  இரவு  உணவு  நேரம்
(எங்கள் குழவுக் கென்று,ஒதுக்கப்பட்டது. காலம் தவறின் காத்திருக்க நேரும்)
உரிய நேரத்தில் சென்று உண்டு முடித்தபின் தங்கும் விடுதிக்குச் சென்று விட்டோம்

             இலண்டன்(-4-8-2013)

       மறுநாள்  காலை  ஏழுமணிக்கே  எங்கள்  பயணம்  தொடங்கியது
காரணம் இராணியாரின்  அரண்மனையில் காவலர்களின்  பணிமாற்ற அணி
வகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கு மென்றும் அது எட்டு மணி அளவில்  நடைபெறுமென தெரிய  எங்கள் வழிகாட்டி வண்டியில் சுற்றிவர  நேரமாக்கும் என்று குறுக்கு வழியில் செல்லலாம் எனக் கூறி வண்டியை  விட்டு இறங்கி தன் பின்னால் நடந்து வரச் சொன்னார்

       விமான நிலையத்தில்  வந்தது சோதனை! இங்கே  வந்தது வேதனை
அனைவரும் வேகமாக நடக்க என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை ! நீண்ட தூரம்(எனக்கு) !  சரிவும் , மேடுமாகவும் இருக்கவே  மூச்சு வாங்கியது
எப்படியோ நானும் சென்று  சேர்ந்தேன்.

        ஏராளமான  மக்கள் அணிவகுப்பைக் காண குவிந்து இருந்தனர்
மணி , எட்டைத் தாண்டியும்  அணிவகுப்புக்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை முடிவில் (ஒன்பது மணியளவில்) வழிகாட்டி ,அன்று
அணிவகுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக வந்து தெரிவித்தார் பெரும்
ஏமாற்றம் அனைவருக்கும் ஏற்பட்டது

       அதன் பிறகு அரண்மனையின்  உள்ளே செல்ல மீண்டும்
வாயிலை  நோக்கி நடந்தோம் முன் அனுமதி ஏற்கனவே பெற்றிருந்தால்
காத்திருக்க  தேவையில்லாமல்  போயிற்று . ஆனால் ஒவ்வொரு குழுவாக
 உள்ளே  அனுப்புவதாலும் அரண் மனை வாயில் சற்று தூரமாக இருப்பதாலும்  உள்ளே படிகள்  ஏறி இறங்க வேண்டி இருக்கும் என்
பதையும்  அறிந்து நொந்து போனேன்!  ஏற்கனவே நீண்ட தூரம்  நடந்தும்
நின்றும் இருந்ததால்  என் கால்கள்  தன் சக்தியை முழுதும்  இழந்து விட்டன

     எனவே என்னால்  யாருக்கும் (உடன் வந்த) தடை ஏற்படக்
கூடாது என்று எண்ணி நான்,  ஒரு முடிவுக்கு வந்தேன்………….

          மீண்டும்  சந்திப்போம்!

                     புலவர்  சா  இராமாநுசம்
     

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...