Showing posts with label கண்டணத் தீர்மானம் ஓட்டு ஆதரவு பாராட்டு. Show all posts
Showing posts with label கண்டணத் தீர்மானம் ஓட்டு ஆதரவு பாராட்டு. Show all posts

Saturday, March 24, 2012

ஒன்றென நாம்தான் ஆவோமா?-ஈழம் உருவாய் மலர்ந்திடச் செய்வோமா?



நன்றது ஓட்டுமே நல்கிவிட்டீர்-சற்று
    நம்பிக்கைப் பெற்றிட வைத்துவிட்டீர்
சென்றது பழியும் ஓரளவே-நாம்
   செய்ய வேண்டுவ பேரளவே
கொன்றவன் தலையும் சாய்ந்திடவே-கொலைக்
   கூண்டிலே அன்னோன் மாய்ந்திடவே
இன்றுமை இங்கேப் போற்றுகின்றேன்-ஏக
    இந்தியா நிலைத்திட சாற்றுகின்றேன்

இத்துடன் முடியும் கதையல்ல!-தமிழ்
   இனமது வாழ்ந்திட மிகநல்ல
சித்தமே கொள்வீர் மத்தியிலே-ஈன
   சிங்களர் உணர்ந்திட புத்தியிலே!
பத்தொடு ஒன்றும் இதுவல்ல-அந்தப்
   பாவிகள் அறியார் பதில்சொல்ல
எத்தனைக் குண்டுகள் பெய்தாரே-ஈழ
   இனமே அழியச் செய்தாரே!

நான்தான் என்பார் சிலபேரே-கபட
   நாடகம் என்பார் சிலபேரே
ஏன்தான் இப்படிப் பேசுவதோ-நல்
   இதயம் வருந்திக் கூசுவதோ?
தான்தான் எல்லாம் இனியென்றே-வரும்
   தலைகனம் நீக்கி நனிநன்றே
ஒன்றென நாம்தான் ஆவோமா?-ஈழம்
   உருவாய் மலர்ந்திடச் செய்வோமா? 
               
               புலவர் சா இராமாநுசம்




   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...