அவலம் அவலம்! அவலம் தானே!-இங்கே
அரசியல் கட்சிகள்! காட்சிகள்! தானே!
கவலை கவலை! கவலை தானே!-நாம்
காண்பது இன்றே கவலை தானே!
மத்தியில் கூட்டாம் பொரியல் தானே-இங்கே
மத்தியில் கூட்டாம் பொரியல் தானே-இங்கே
மக்கள் மத்தியில் மறியல் தானே!
புத்தியில் மக்களாய் ஆனோம் தானே-நாம்
புரிந்தும் மறந்து போவோம் தானே!
அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
அம்மா ஏற்றினார் பாலின் விலையே-அது
அடுக்குமா? சொல்லியும் பலனே இலையே!
சும்மா அவரும் நடத்து கின்றார்-நமக்கு
சுரணை இலையெனக் காட்டு கின்றார்!
பேருந்து கட்டணம் குறைய வில்லை-அதைப்
பேருந்து கட்டணம் குறைய வில்லை-அதைப்
பேசிட கேட்கவும் நாதி இல்லை!
சீரின்றி மின்கட்டணம் உயர்ந் ஒல்லை-அதைச்
செப்பிடின் வருவதோ பீதி எல்லை!
போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
போலிகள் நடத்தும் நாடகம் தானே-செய்தி
போடும் இங்குள ஊடகம் தானே!
கேலிக்கே உரியன இப்போ ராட்டம்-ஓட்டு
கேட்கவா இத்தகைஆர் பாட்டம்!
மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
மருமகள் உடைத்ததும் மண்கு டமாம்!-அங்கே
மாமியார் உடைத்ததும் மண்கு டமாம்!
அருகதை இல்லையே இருவ ருக்கும்-வீண்
ஆர்பாட்டம் செய்வது அருவ ருக்கும்!
இரட்டை வேடமே போடு கின்றார்-இங்கே
இரட்டை வேடமே போடு கின்றார்-இங்கே
ஏழைக்குக் கேடே தேடு கின்றார்!
அரட்டை அரங்கமே ஆகின் றதாம்-நமை
ஆளவோர் செயலும் போகின் றதாம்!
மௌனம் சம்மதம் என்ப தல்ல-மக்கள்
மௌனம் சம்மதம் என்ப தல்ல-மக்கள்
மனதில் இருப்பது மறதி யல்ல!
கவனத்தி கொண்டால் மீள்வ துண்டே-மேலும்
கனிவுடன் செயல்படின் ஆள்வ துண்டே!
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம்

