Showing posts with label குழந்தை குறும்பு மழலை இன்பம் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label குழந்தை குறும்பு மழலை இன்பம் கவிதை புனைவு. Show all posts

Friday, April 19, 2013

பொம்மை அம்மா பொம்மை – மழலை பேசும் நல்ல பொம்மை




பொம்மை அம்மா  பொம்மை –மழலை
   பேசும்  நல்ல பொம்மை!
அம்மை அம்மா அம்மை – அவள்
    அழகு  நடையும்  செம்மை!

நடக்கும்  போதே  விழுவாள் –நம்மை
      பார்தா மட்டுமே  அழுவாள்!
துடுக்கு  தனமே மிக்காள் –யாரும்
    தூக்கிக்  கொஞ்சத்  தக்காள்!

காது கண்ணு  கேட்டா –தனது
    கையால்  தொட்டுக்  காட்ட,
சேதி மட்டும்  புரியும்! –அதைச்
   செய்து காட்ட  தெரியும்!

கோபம்  கூட வருமே –பெரும்
   குரலில்  அழுகை  தருமே!
பாப  மென்று சென்றே –தூக்க
  பதறித்  திமிரும்  நன்றே!

இங்கும் அங்கும்  ஓடும்-எதையும்
   இழுத்து  கலைத்து  போடும்!
தங்கு  தடையோ இல்லை –அம்மா
   தடுத்தால்  மேலும்  தொல்லை!

குருவி  காக்கா காட்டி –தினம்
   கொடுக்கும்  உணவை  ஊட்டி!
அரிய  செயலாய் தாயும்–அதனை
    அளிக்க திறக்கும்  வாயும்!

அண்ணன்  வரவும்  கண்டே –மிக
    அளவில் மகிழ்வு கொண்டே!
கண்கள்  விரிய ஓடும் –இரு
     கைகள்  பற்றி  ஆடும்!

அப்பப்பா செய்வதவள் குறும்பு! –ஆனா
    அத்தனையும்  இனிக்கின்ற கரும்பு
ஒப்பப்பா சொல்வதற்கு  இயலா! –எங்கள்
     உள்ளத்தில்,நடனமிடும்  மயிலா!

              புலவர்  சா  இராமாநுசம்
  குறிப்பு-
      சென்ற வாரம் என்  குடும்பத்தோடு திருமணவிழாவில்  கலந்து கொள்ள திருச்சி சென்றபோது உடன்  வந்த என் மருமகனின் தம்பி மகள் செய்த குறும்புகளைக் கண்டே எழுதிய கவிதையும் புகைப்படமும்.
 
 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...