அணைந்துவிட்ட சாதித்தீ
மீண்டும் இன்றே –கொடிய
ஆலகால விடமாக மாற
நன்றே!
இணைந்துவிட்ட காதலர்கள்
பிரிந்தோர் ஆக –அந்தோ
இளவரசன்
உயிர்மட்டும் பறந்து போக!
நனைந்துவிட துயராலே பல்லோர் உள்ளம் – இன்றே
நாடெங்கும்
பாயுதய்ய ! கண்ணீர் வெள்ளம்!
நினைந்திதனை வருந்துமா ! பாழும் உலகம் –மேலும்
நீளாது
திருந்துமா மூளும் கலகம்!
உண்மையிலே சாதிதன்னை
ஒழிக்கும் எண்ணம் –இங்கு
உருவாக
வில்லையெனில், ! அழிக்கும்! திண்ணம்!
அண்மையிலே
நடக்கின்ற நிகழ்வு எல்லாம்- அதற்கு
ஆதார
மானதென காட்டும் சொல்லாம்!
புண்மைமிகு
அரசியலே காரணம் ஆகும் –சாதிப்
புற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே போகும்!
வண்மைமிகு சட்டத்தால் பயனே
இல்லை! –நாளும்
வளர்ப்பவரின் சுயநலமே! உண்டோ எல்லை!
ஓட்டுதனைக் குறிவைத்தே
சாதி இங்கே – மனித
உணர்வுகளை
தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?
ஆட்டுவித்தால்
ஆடுகின்ற பொம்ம லாட்டம் –கட்சி
அரசியலார் அனைவருமே கொள்ளும் நாட்டம்!
ஏட்டளவில்
கொள்கையென திட்டம் போட்டே –அறியா
ஏழைகளை ஏமாற்றி
ஓட்டு கேட்டே!
நாட்டளவில்
இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை
நம்புகின்ற
மக்கள்தான் உணர்தல் என்றே!?
புலவர் சா
இராமாநுசம்

