Showing posts with label தமிழ் மணம் வாராத நிலை கவிதை புனைவு. Show all posts
Showing posts with label தமிழ் மணம் வாராத நிலை கவிதை புனைவு. Show all posts

Tuesday, June 19, 2012

போனாய் எங்கே தமிழ்மணமே?


போனாய்  எங்கே தமிழ்மணமே-ஏங்கிப்
   பார்த்திட மறையும் தமிழ்மணமே!
ஆனாய்  என்ன  அறியோமே-எங்கள்
   ஆவலை அடக்க தெரியோமே
தேனாய் இனிக்க வருவாயே-பதிவை
  தேடி  எடுத்துத் தருவாயே!
மானெனப் பாய்ந்து போனதுஏன்-இந்த
   மறையும் நிலைதான் ஆனதுஏன்?


எங்கே சென்றாய் சொல்வாயா-உன்
   எதிரியை எதிர்த்து வெல்வாயா?
இங்கே பலரும்  அலைகின்றார்-தினம்
     ஏங்கி  ஏங்கி குலைகின்றார்!
அங்கே தங்கி விடுவாயா-மனம்
     அஞ்சுதே துயரம் படுவாயா?
பங்கே உன்னுடன் நாள்தோறும்-வைத்த
   பதிவரின் துயரை உடன்பாரும்!
 
முன்னே ஒருமுறை இவ்வாறே-துயர்
   மூண்டிடச் செய்தல் எவ்வாறே!
என்னே அருமை கண்மணியே-இது
   ஏற்புடை செயலா தமிழ்மணியே!
பொன்னே என்றுனை காத்திடவும்-தினம்
    போற்றி வரவை நோக்கிடவும்,
மின்னே போலத் விரைந்திடுவாய்-வலை
   மேதினிக் காணத் தந்திடுவாய்!
 
           புலவர் சா இராமாநுசம்
    
  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...