மறவாமல் நாள்தோறும் தொழுவோன் உன்னை –ஏழு
மலைவாச காப்பவன் நீதான் என்னை
உறவானார் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார் –வரின்
உதவிட வேண்டுமே! அச்சம் கண்டார்
இறவாது இன்றென்னை காப்போர் தாமே- வலை
இணையதள உறவுகள்! உண்மை! ஆமே!
பிறவாத உடன்பிறப்பே ! அவர்கள் இன்றும் – வந்து
பேசுகின்றார் !என்னோடே வாழ்க என்றும்!
புலவர் சா இராமாநுசம்

