Showing posts with label நேபாளம் மக்கள் துன்பம் தீர வேண்டுதல் கவிதை. Show all posts
Showing posts with label நேபாளம் மக்கள் துன்பம் தீர வேண்டுதல் கவிதை. Show all posts

Saturday, May 16, 2015

வேண்டுவோம் இயற்கைத் தாயிடமே வேதனை செய்வதா சேயிடமே!


பட்டக் காலிலே படுமென்பார்
கெட்டக் குடியே கெடுமென்பார்
பழமொழி சொன்னார் அந்நாளே
பார்த்தோம் சான்றாய் நேபாளே
மீண்டும் மீண்டும் வருகிறது
மிரட்டும் அதிர்வுகள பலஊரில்
வேண்டுவோம் இயற்கைத் தாயிடமே
வேதனை செய்வதா சேயிடமே


பட்டது போதும் அவர்துயரம்
பறந்திட அங்கே பலஉயிரும்
கெட்டது போதும் இனிமேலும்
கெடுவது வேண்டா வருநாளும்
விட்டிடு பூமித் தாயேநீ
விழுங்க திறவாய் வாயேநீ
தொட்டது அன்னவர் துலங்கட்டும்
தொழில்வளம் முன்போல் விளங்கட்டும்

உழைத்தவர் நலம்பெற வேண்டாமா
உண்மை! அறிவாய் ஈண்டாமே
தழைக்க வேண்டும் அவர்வாழ்வே
தடுத்தால் உனக்கும் அதுதாழ்வே
பிழைக்க அன்னவர் வழிகாட்டி
பூமித்தாயே கருணை விழிகாட்டி
செழிக்கச் செய்வது உன்செயலில்
செழிப்பதும் அழிப்பதும் உன்கையில்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...