Showing posts with label நேயர் விருப்பம் கவிதை நிறைவு செய்யப்பட்டது. Show all posts
Showing posts with label நேயர் விருப்பம் கவிதை நிறைவு செய்யப்பட்டது. Show all posts

Saturday, March 22, 2014

அரசியல் நமக்கு அவசியமே!(அருணாவின் விருப்பம் ! நிறைவேற, பாடிய பாடல்)



அரசியல் நமக்கு  அவசியமே !-நல்லோர்
    ஆட்சிக்கு  வருவதும் அவசியமே!
பரம்பரை நீங்குதல் அவசியமே! –பதவி
    பண்புளார்  தாங்குதல்  அவசியமே!

மன்னர் ஆட்சி முடிந்தாலும் –நல்
    மக்கள் ஆட்சி  மலர்ந்தாலும்
என்ன பலன்தான் கண்டோமே –இன்னும்
   ஏழைகள் அதிகமாய்  கொண்டோமே!

பாலும் தேனும் தெருவெங்கும் –விரைந்து
   பாய நாட்டில் வளமோங்கும்!
நாளும் சொல்லியே நம்பவைத்தார் –ஆனால்
   நாடாளச் சென்றவர் வெம்பவைத்தார்!
வீதிக்கு  நடுவில்  மதுக்கடையே –பெண்கள்
    வீதியில்  நடப்பர்  பயத்திடையே!
நீதிக்கும் நேர்மைக்கும்   இடமில்லை! –கொள்ளை
    நிகழா நாளோ  ஏதுமில்லை!

குற்றம்  ஆள்வோர் மட்டுமல்ல –இலஞ்சம்
    கொடுக்கா மனிதர்  யார்சொல்ல
உற்றே நோக்கின்  நம்மைநாம் –நன்கு
    உள்ளம் காட்டும் உண்மைதனை

      புலவர்  சா  இராமாநுசம்
   

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...