விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்
விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!
மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்
மனத்தளவில் என்றென்றும் இளைஞன் நானே!
இருந்துண்டு இயன்றவரை ஏதோ பதிவை- நாளும்
எழுதிகிறேன்! வலைதன்னில்! வாட்ட, முதுமை
பெருந்தொண்டு செய்திட தடையாம் ஆமே!-எனவே
பொறுத்திடுவீர் தக்கோரே! வருக! வருக!
புலவர் சா இராமாநுசம்

