Showing posts with label ஆடுகின்றார் நாடகம் ஈழ ஆதரவு பேராலே நாடகம். Show all posts
Showing posts with label ஆடுகின்றார் நாடகம் ஈழ ஆதரவு பேராலே நாடகம். Show all posts

Friday, November 15, 2013

ஆடுகின்றார்! ஆடுகின்றார்! நாடகம் –ஈழ ஆதரவுப் பேராலே நாடகம்





ஆடுகின்றார்! ஆடுகின்றார்! நாடகம் –ஈழ
    ஆதரவுப்  பேராலே  நாடகம்
போடுகின்றார் போடுகின்றார்! நாடகம் –ஈழப்
    போராளிப் பேராலே  நாடகம்
தேடுகின்றார் தேடுகின்றார்!  ஓட்டே! –வரும்
     தேர்தலிலே  வெற்றிபெறக் கேட்டே
கேடுதரும்  அரசியலே! போபோ!-தட்டிக்
    கேட்பவர்க்கு வைப்பதென்ன ஆப்போ

ஒருவருக்கும்  உணர்வில்லை ! இங்கே!- இதில்
    உள்நோக்கம் இருப்பதாலே எங்கே?
வருவதில்லை ஒருநாளும்  வெற்றி – வெறும்
    வாய்வார்த்தை தந்திடுமா  பெற்றி
உருவமின்றி நிழல்தேடும்  தன்மை –இன்று
   உள்ளநிலை! உணர்வீராம்! உண்மை!
பெருமையில்லை கட்சிகளே இன்றே –எடுத்துப்
    பேசுவதே செயலாதல் என்றே!?

               புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...