Showing posts with label காமன்வெல்த் மாநாடு பிரிட்டன் கண்ணீர் இந்தியநாடு. Show all posts
Showing posts with label காமன்வெல்த் மாநாடு பிரிட்டன் கண்ணீர் இந்தியநாடு. Show all posts

Monday, November 18, 2013

சல்மானே ! நீர்சென்று-அங்கே சாதித் தென்ன?





சல்மானே ! நீர்சென்று-அங்கே
   சாதித் தென்ன?
சொல்வீரா  தீதேதும் - இதனால்
   தொடராதா இனியேதும்
கல்மனமும்  கரையுமென -கண்டு
   கேமரூன் கண்ணீர்விட!
பல்முறையும்  சென்றீரே -நீர்
    பகர்ந்தீரா ! பார்த்தீரா !

ஆணையிட  முடியாதாம் -அவன்
   ஆணவமாய் பேசுகின்றான்!
பூணையென  போய்விட்டு, -சத்தமின்றி
   பொறுமைமிக!  வாய்விட்டு,
மானமின்றி! மன்னிப்பும் -அடிமையென
   மண்டியிட்டு கேட்பதா!?
யானைபல  மிந்தியா – பலன்
   என்னவென !  சிந்தியா?

தொப்புள்  கொடியுறவு –இங்கே
    துடிக்கிறது ! வெடிக்கிறது!
தப்புக்குத்  துணையாக –அன்று
    தாளமிட்ட  காரணத்தால்
ஒப்புக்கே ஆடுகின்றார் –நடந்த
    உண்மையிலே!  நாடகமே!
செப்பிக்க ஏதுமில்லை! – வாழ
    செந்தமிழா ஒன்றுபடு!

                                புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...