Showing posts with label தமிழக அரசின் அவல நிலை. Show all posts
Showing posts with label தமிழக அரசின் அவல நிலை. Show all posts

Friday, July 14, 2017

வடக்கிருந்து வருகிறதே ஊதக் காற்றும்-ஏதும் வாய்திறவா தமிழரசே உண்மை சாற்றும்





நடக்கிறதா  அரசுயென   தெரிய வில்லை-நாட்டில்
  நடப்பதென்ன  ஒன்றுமே   புரிய வில்லை!
முடங்கியதோ செயல் படுதல்  என்றே-குழப்பம்
  மனமுழுதும் தோன்றிவிட ஏனோ!  ஒன்றே
படச்சுருளாய் ஒடுதய்யா எண்ணத் திரையில்-நின்று
   பாழுமனம் தேடுதய்யா அந்தோ குறையில்
வடக்கிருந்து  வருகிறதே  ஊதக்   காற்றும்-ஏதும்
    வாய்திறவா தமிழரசே உண்மை  சாற்றும்

புலவர் சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...