Showing posts with label நிம்மதி நிம்மதி நிம்மதியே-நீயும் எவ்விடமே. Show all posts
Showing posts with label நிம்மதி நிம்மதி நிம்மதியே-நீயும் எவ்விடமே. Show all posts

Sunday, July 9, 2017

நிம்மதி நிம்மதி நிம்மதியே-நீயும் நிலையென இருப்பது எவ்விடமே






நிம்மதி  நிம்மதி நிம்மதியே-நீயும்
 நிலையென இருப்பது எவ்விடமே
எம்மதி கலங்கிப்  புலம்பிடவே-வரும்
   எண்ணங்கள் அறியா!  கலங்கிடவே
தம்மதி  இழந்தவர்  பலபேரே-தேடியே
  தவித்துமே  அலுத்தவர்  சிலபேரே
சம்மதம் இதவென  சொல்லிவிடு-உனக்கு
  சரியெனப் பட்டால் சாகவிடு

உனக்கே நிம்மதி இல்லையோ-ஐயம்
   உதிக்கிது என்னுள் !போக்கிடுவாய்
தனக்கு  மிஞ்சினால் தானமென-செல்லும்
    தத்துவம் தன்னை  நோக்கிடுவாய்
ஆண்டவர்   மனதிலும்  நீயில்லை-இன்று
     ஆள்வோர்  மனதிலும்  நீயில்லை
தாண்டவம் ஆடிடும்  நிம்மதியே-இதுவே
    தவறென பாடுது  என்மதியே!
 புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...