Showing posts with label அறவழி மாணவர் போராட்டம் மத்திய அரசு ஆவன உடன் செய்க. Show all posts
Showing posts with label அறவழி மாணவர் போராட்டம் மத்திய அரசு ஆவன உடன் செய்க. Show all posts

Tuesday, March 19, 2013

ஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று ஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்


ஒட்டுமொத்த மாணவரும் கிளம்பி விட்டார்-இன்று
ஊர்தோறும் விரதமென ஒன்று பட்டார்
பட்டுமெத்தை பதவிசுகம் தேடீ யல்ல!-அவர்
படிக்காமல் பட்டம்பெற விரும்பி அல்ல
திட்டமிட்டு தினந்தோறும் சிங்கள வெறியன் -பெரும்
தீங்குதனை தமிழருக்கு இழைக்கும் சிறியன்
கொட்டமிடும் பக்சேவை குற்றக் கூண்டில்
கொலைக் குற்றவாளியென நிறுத்தல் வேண்டி!

மறவர்குல மாணிக்கம் மாணவர் ஆமே -இங்கே
மனமுருகி துயர்பட்டு பொங்கி தாமே
அறவழியில் போராடி வருதல் காண்பீர் -காந்தி
அண்ணல்வழி வெற்றியென உறுதி பூண்பீர்
இனவெறியன் தண்டனைக்கு மத்திய அரசே-உடன்
ஏற்கட்டும் உறுதியென போரின் முரசே
தனையிங்கே கொட்டிவிட ஆவன செய்வீர் -எவர்
தடுத்தாலும் ஓயாது! அறிந்தால் உய்வீர்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...