நடக்கும் என்பார் நடவாதென்பார்-என்ன
நாடகம் இதுவோ தெரியவில்லை
கடக்கும் நாளே இன்னும் ஒன்றாம்-பின்பே
கபடம் வெளிப்படும் நன்றாம்
தேர்தல் வந்தால் தெரியும் தானே!-எதற்கு
தேடல் விடையும் வீணே
பார்தனில் அடடா பதவிப் பெறவே-கட்சிகள்
படுவதும் சொல்வதா அறவே
புலவர் சா இராமாநுசம்

