Showing posts with label மக்கள் துன்பம். Show all posts
Showing posts with label மக்கள் துன்பம். Show all posts

Tuesday, January 12, 2016

ஆறுதலை சொல்வற்கு யாரும் காணோம் அஞ்சியஞ்சி வாழ்வதற்கு நாமும் நாணோம்!



கைநிறை  காசெடுத்துப்  போனால்  கூட
 காய்கறிகள் விலையந்தோ அதிகம்  ஓட
பைநிறைய  வில்லையெனில்  வாழ்தல் எங்கே
பல்பொருளும் இவ்வாறே  நாளும்  இங்கே

மத்தியிலே  ஆள்வோர்க்கு  கவலை  இல்லை
மாநிலத்தை  ஆள்வோர்க்கு  கவலை  இல்லை
புத்தியிலே  நமக்குத்தான்  என்றே  நொந்தே
புலம்புவதா மக்கள்தான்  உள்ளம்  வெந்தே

ஏறுமுகம் எப்பொருளும் நஞ்சைப் போன்றே
இனியென்றும் மாறாது  என்றே   தோன்ற
ஆறுதலை  சொல்வற்கு  யாரும் காணோம்
அஞ்சியஞ்சி  வாழ்வதற்கு  நாமும்  நாணோம்

புலவர்  சா  இராமாநுசம்


இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...