Thursday, June 9, 2011

முதல்வருக்கு நன்றி மலர்

முத்துப் போன்ற தீர்மானம்-நம்
   முதல்வர் காத்தார் தன்மானம்
ஒத்துப் போக அனைவருமே-நல்
    ஒற்றுமை காட்டி தமிழினமே
சத்தாம் வழிவகை வடித்தாரே-புகழ்
     சரித்திர முடிவு எடுத்தாரே
பத்தொடு ஒன்றா ?இதுவல்ல-இந்த
    பாட்டில் முழுவதும் நான்சொல்ல

அருளாதாரம்  அணு அளவும்-என்றும்
    அறியா பக்சே உள்ளளவும
பொருளாதார தடை ஒன்றே-சிங்களர்
     போக்கினில் மாற்றம் தருமென்றே
ஒருநாள் கூட எண்ணாதீர்-வந்த
     ஒற்றுமை கெடவே பண்ணாதீர்
திருநாள் காணின் தனிஈழம்-எட்டுத்
    திசையும் தமிழினப் புகழ்பாடும்


ஒன்றே செய்யினும் நன்றாமே-அதை
    உடனே செய்தீர் இன்றாமே
குன்றே எதிரே மறித்தாலும-கை
    குறுக்கே குழியே பறித்தாலும
நின்றே முதல்வர் ஆய்வீரா-ஈழம்
    நிலைக்க ஆவன செய்வீரா
வென்றே வந்தீர் நீர்வாழ்க-ஈழம்
    வென்றிடும் வழிதனை நீர்சூழ்க

           புலவர் சா இராமாநுசம்

2 comments :

  1. //வென்றே வந்தீர் நீர்வாழ்க//
    அருமையான வாழ்த்து,கவிதை வடிவில்!

    ReplyDelete
  2. விருத்தத்தில் முதல்வருக்கு விண்ணப்பம் வைத்துள்ளீர்கள்.
    முதல்வரின் ஒளிப் பார்வை எம் மீதும் தெறித்தால் சந்தோசமே.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...