Saturday, July 2, 2016

நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்!


நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது
நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்!
தேள்போலும் கொட்டுவதோ ஊடகச் செய்தி –தாளைத்
திறந்தாலே தலைப்பினிலே முதலில் எய்தி!
வாள்போல அறுக்கிறது ! வாட்டத் துயரம்-மக்கள்
வாழ்கின்றார் !அச்சமே நாளும் உயரும்!
ஆள்கடத்தல் நடக்கிறது அடியாள் வைத்தே –உடன்
அடக்கிடவீர் ஆள்வோரே பொறியும் வைத்தே![


புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...