Thursday, February 8, 2018

நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!


நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!


புலவர்  சா இராமாநுசம்

Monday, February 5, 2018

உய்யாவழியில் ஆளாதீர் ஆய்ந்து-விரைந்து உய்யும் வழிதனைக் காணுங்கள்





ஐயோப் பாவம் இடைப்பாடி-ஓ,பி.எஸ்
  ஐயா அவரும் உடன்பாடி-அந்தோ
பொய்யாத்  தோன்றும் கானலையே -நம்பி
   போவதும் ஆள்வதும் நிலையிலையே-மேலும்
செய்யாத் தவறுக்கு தண்டணைதான்-ஆதரவு
    செப்பியோர் மாற்றம் கொண்டதுதான-இனியும்
உய்யாவழியில் ஆளாதீர் ஆய்ந்து-விரைந்து
  உய்யும் வழிதனைக்  காணுங்கள்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...