Tuesday, October 4, 2016

இந்தியா என்பதொரே நாடாம்-என்ற எண்ணாத்தால் வந்ததே கேடாம்!


இந்தியா என்பதொரே நாடாம்-என்ற
எண்ணாத்தால் வந்ததே கேடாம்
தந்ததே மத்தியில்! கூறும் !-நீதி
தவறிய பதில்மனு பாரும்!
வெந்தது தமிழரின் உள்ளம்-நன்கு
வெளிப்பட பா.ஜா .கா கள்ளம்
சிந்திக்க வேண்டுமா இனியும்-திரண்டு
செய்தாலே அறப்போரும் கனியும்
செய்வீரா! நீர் செய்வீரா


புலவர் சா இராமாநுசம்

Sunday, October 2, 2016

அண்ணல் காந்திக்கு அஞ்சலி!


அண்ணலே காந்தி நீங்கள்-தூய
அறவழி சுதந்திரத்தை எங்கள்-இரண்டு
கண்ணெனப் பெற்றுத் தந்தீர்-ஒளிரும்
கலங்கரை விளக்கென வந்தீர்-ஆனால்
தன்னலம் மிக்கார் இங்கே-அதனை
தரமின்றி போட்டார் ! பங்கே!-எனினும்
பொன்மலர் என்றும் நீராம் –மணக்கும்
புகழ்தானே! மறையாப் பேராம்
வாழ்க காந்தி நாமம்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...