Saturday, November 14, 2015

என் முகநூல் பதிவுகள்!




உறவுகளே வணக்கம்!
இடைவிடாது பெய்த கனமழையால் தமிழகத்தில் பல ஏரிகள் நிரம்பியும் வழிவதோடு உடைந்தும் போவதாகச். செய்திகள் வரும் நிலையில் சென்னக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள்( புழல்.பூண்டி.சோழவரம் செம்பரம்பாக்கம) மட்டும் நிரம்பாததோடு நான்கில் ஒருபங்கு அதாவது மாநகரின் மூன்றுமாத தேவைக்கு உரிய நீர்தான் மொத்தமாக வந்துள்ளதாகக்
குடிநீர் வாரியம் அறிவித்துள்ள செய்தி மிகவும் வேதனையானது! நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தும் ஏரிகள் நிரம்பா நிலைக்கு . யார்,என்ன காரணம் நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமப்பு செய்யப்பட்டுள்ளனவா!!!? அவ்வாறு இருந்தால் உடன் அவற்றை அகற்ற அதிகரிகளும் அரசும் செயல்பட வேண்டும்
மாண்புமிகு முதல்வர் அவர்கள் உடன் தலையிட்டு ஆய்வு செய்ய ஆணையிட வேண்டுகிறோம்!

உறவுகளே!இன்று பெய்யும் கடுமையான மழையினால் நாம் பெற்றுவரும் சேதங்கள் அனைத்தையும் பார்க்கும் போது வள்ளுவன் கூறிய குறள் தான் நினைவிற்கு வருகிறது! குற்றமோ, தவறோ, துன்பமோ எதுவானாலும் அது வருவதற்கு முன்
பாதுகாப்பினை தேடிக்கொள்ள வேண்டும் இலையென்றால்
எரியும் தீயின் முன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல எரிந்து விடும்
இதுபோலத்தான் இன்று தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரண பணிகளின் நிலையும் உள்ளன!
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர
வைத்தூறு போலக் கெடும்- குறள்

கரடு முரடான பாதையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு சமதரையிலே நடக்கும் போது மகிழ்ச்சி வரும். சமதரையிலேயே நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்கு கரடு முரடான பாதையிலேயே நடக்கும் போது துன்பம் தரும்! ஆனால் இரண்டு வழிகளிலும் நடந்து பழக்கப்பட்டு வந்தவனுக்குப் பக்குவம் வரும்! நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் அமையும்! அமைய வேண்டும்

புலவர்  சா  இராமாநுசம்

Tuesday, November 10, 2015

மாண்புமிகு பிரதமருக்கு எதிரி யாக-இங்கே மற்றவர்கள் யாருமில்லை உதிரி யாக!


பீகாரில் பா.ஜ. கா தோல்வி! காரணம் பற்றி ஆய்வு!பத்திரிக்கை  செய்தி!
கடந்த மார்சு மாதமே நான் எழுதிய கவிதை இது பிரதமர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ......!
மீள்பதிவுதான்! படித்துப் பாருங்கள்!

மாண்புமிகு பிரதமருக்கு எதிரி யாக-இங்கே
மற்றவர்கள் யாருமில்லை உதிரி யாக
தாண்டவமே ஆடுவது அவரின் கட்சி- நாளும்
தவறாகப் பேசுவதே அதற்கே சாட்சி!


முன்னுக்குப் பின்முரணாகக் காரண மின்றி –பலரும்
முறையற்றுப் பேசுவதும் சாரமே யின்றி!
என்னவெனக் கேட்கின்றார் நல்லோர் தாமே-பிரதமர்
ஏற்றாரா? அவரமைதி ! சம்மத மாமே!

கட்சியிலே கட்டுப்பாடு அணுவு மில்லை –யார்
காரணமோ? ஆய்வதிலே பயனு மில்லை!
ஆட்சியிலே அமைச்சருள்ளும் இணைப்பே யில்லை –பிரத
அமைச்சருக்கு இதனால் ஆமே தொல்லை!

அடக்குவதே நன்றாகும் பிரதமர் உடனே-நன்கு
ஆள்வதற்குச் செய்வதவர் உரிய கடனே!
நடப்பதிலே எதுவுமே தெளிவு, காணோம் – மக்கள்
நம்பிக்கைக் குறைகிறது தீர்வு வேணும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...