Saturday, January 21, 2017

கொட்டும் மழையே என்றாலும்-கடும் குளிரைப் பனியே தந்தாலும்!


கொட்டும் மழையே என்றாலும்-கடும்
குளிரைப் பனியே தந்தாலும்
திட்டம் தீட்டிப் அறப்போரை-மேலும்
தீவிரம் ஆக்கும் மறவோரே
இட்டம் பேல நடவாமல்-அறத்தின்
எல்லை தான்னைக் கடக்காமல்
கட்டுப் பாடய் நடக்கின்றீர்!-கடமை
கண்ணியம் பேணிக் காக்கின்றீர்


புலவர் சா இராமாநுசம்

வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்!

திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே
திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே
வரலாறு காணாத போராட்டம் கண்டீர்
வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்
தரமான அறவழியே போராட்டம் போக
தம்நிகரும் இல்லையென அமைதிமிக ஆக
சரமாக மேன்மேலும் கூடுகின்றார் இங்கே
சரிசெய்ய முயலாத அரசுகளும் எங்கே?


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...