Sunday, January 1, 2017

பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம் பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக!


பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம்
பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக
தாங்கொணா துயரத்தால் இரண்டே நாளில்-அந்தோ
தன்னுயிரைத் பதினெட்டு பேரும் தந்தார்
ஆங்கிலப் புத்தாண்டே அடுக்கும் செயலா-உந்தன்
ஆரம்பம் இதுவானால் வாழ்வே புயலா
தீங்கின்றி நீசெல்ல தூண்டு கின்றோம்-காக்க
தெய்வத்தை மறவாது வேண்டு கின்றோம்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...