Friday, April 28, 2017

ஏக்கமொடு எழுதுகின்றேன் இறைவா நீயும்-மனம் இறங்கிவந்து அருள்புரிய துயரம் மாயும்



ஏக்கமொடு எழுதுகின்றேன் இறைவா நீயும்-மனம்
இறங்கிவந்து அருள்புரிய துயரம் மாயும்
காக்கவொரு அரசில்லை இன்றே இங்கே -மக்கள்
கண்ணீரில் மிதப்பதன்றி வாழ்தல் எங்கே
ஆக்கமின்றி உள்ளதும் அழிந்து போக –நாளும்
அல்லல்பட்டு தீராது உயிரும் சாக
!நோக்கமெலாம் பணம்பதவி ஆட்சி என்றால் –ஆள்வோர்
நோக்குவரோ!? மக்கள்நலன்! இவ்வண்  சென்றால்


புலவர் சா இராமாநுசம்

Wednesday, April 26, 2017

எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும் எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்



எத்தனை நாட்களோ இணைப்பு நாடகம்-நாளும்
எழுதிட முரண்பட செய்திகள் ஊடகம்
பித்தரைப் போல பேசுவர்! பலரும்-ஏனோ
பின்னர் அதனை மாற்றுவர் சிலரும்
சித்தம் கலக்கும் செய்திகள் செப்பிட- சற்றும்
செயல்படா அரசுக்கு நிகரென ஒப்பிட
இத்தரை தன்னில் எதுவுமே  இல்லை-அந்தோ
இறைவா காக்க வந்திடு ஒல்லை!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...