Monday, March 30, 2015

இது , பலரும் படித்து அறிய வேண்டிய முக்கியச் செய்தி!


அன்பின் இனிய உறவுகளே
வணக்கம்
காவிரியில் கர்நாடகம் இன்று அணையைக் கட்ட முற்படும் இடம் எதுவென்பது பலருக்குத் தெரியவில்லை! கபினி அணை நிரம்பியபின் எஞ்சிய நீரும், கிருட்டினராச சாகர் நிரம்பியபின் எஞ்சிய நீரும் வெளியேறி அதன்பின் தடையின்றி மேட்டூர் அணைக்குத் தற்போது வந்து கொண்டிருக்கிறது . வெள்ளம் வந்தாலன்றி மேட்டூர்
நிரம்புவதில்லை! இந்நிலையில் கபினுக்கும் கிருட்டினராச சாகருக்கும் கீழே மேட்டூருக்கு மேலே இடையில் மேகதாது என்ற
இடத்தில் அணையைக் கட்டி இதுவரை வந்து கொண்டிருக்கும் எஞ்சிய நீரையும் தடுத்துவிட கர்நாடகம் முற்படுகிறது ! மத்திய அரசோ அமைதியாக இதனை வேடிக்கைப்
பாரர்ப்பதோடு இருமாநிலங்களையும் மோத விடுவது, இந்திய ஒருமைப் பாட்டிற்குக் கேடு ஃஎன்பதை அனைவரும் உணர வேண்டும்! பிறருக்கும் உணர்த்த வேண்டும்


புலவர்  சா   இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...