Saturday, March 11, 2017

மகளிர்க்கு மகளிர் தின வேண்டுகோள் இட ஒதிக்கிடு!



மகளிர்க்கு மகளிர் தின வேண்டுகோள்
இட ஒதிக்கிடு!

பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே


விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே

சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே

நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்

புலவர் சா இராமாநுசம்

Friday, March 10, 2017

சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா!



சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா-ஒன்று
சேரவழி ஏதுமில்லை அண்ணாதிமுகா
உதிறிபூவாய் போனதய்யா அண்ணாதிமுகா-பானை
உடைந்தஓடாய் கிடக்குதய்யா அண்ணாதிமுகா
பதிரேநெல்லில் கலந்ததுபோல் அண்ணாதிமுகா-காற்றில்
பறக்கும்நிலை கண்டதய்யா அண்ணாதிமுகா
எதிரியின்றி அழிவதுதான் அண்ணாதிமுகா-மீண்டு
எழுவதற்று வாய்ப்பில்லா அண்ணாதிமுகா!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, March 8, 2017

மகளிர் தின கவிதை!



ஏட்டளவில் சமஉரிமை மகளிர்க் கென்றே-சொல்லி
ஏழாண்டாய் ஏமாற்றி வருதல் ஒன்றே
நாட்டளவில் காணுகின்ற அவலம் இன்றே-நம்முடை
நாடாளும் மன்றத்தில் நடக்க நன்றே
வீட்டளவில் கூடசம உரிமை இல்லை-எனில்
வீணாக மகளிர்தினம் !எதற்குத் தொல்லை
பாட்டளவில் சொல்லுவதா துயரின் எல்லை-உலகில்
பாவையராய் பிறந்தாலே பல்வகைத் தொல்லை!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...