Thursday, November 8, 2012

அன்பின் இனிய கோவை உறவுகளே!


   அன்பின் இனிய கோவை  உறவுகளே!
                                                                                       வணக்கம்!
  
             வரும் ஞாயிறு (11-11-12)அன்று நடைபெறும் என்நண்பரின், மகன்
திருமணவிழவில் கலந்து கொள்ள கோவை வருகிறேன்
             இரண்டுநாள் முன்னதாக, அதாவது , வெள்ளிக்கிழமையே(9-11-12)
இங்கிருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு (இரயில் மூலம்) மதியம் 2மணி
அளவில் அங்கு வந்துவிடுவேன்
           அன்று 3 மணிமுதல் சனிக்கிழமை 3 மணிவரை விடுதியில் ஓய்வாகத்
தான் இருப்பேன்
          உறவுகளே உங்களுக்குத் தொல்லையாக இல்லை யென்றால், உமக்குள்
கலந்து முடிந்தவரை, வர முடிந்தவர்கள் ஒன்றாக வரின் பதிவுலகின் எதிர் காலம் பற்றி ஆய்வு செய்யலாம் என அன்போடு அழைக்கிறேன்
          என் கைபேசி எண்-9094766822
       வெள்ளி(நாளை) மதியம் 3 மணிக்குமேல் தொடர்பு  கொண்டால் தங்கும்
இடம் பற்றிய  தகவல் தெரிவிக்கிறேன்
                                                   நன்றி

                                   புலவர் சா இராமாநுசம்

 

Wednesday, November 7, 2012

அன்றேநான் சொன்னனே கேட்கவில்லை -கைது ஆனபின்னர் கண்டோமே துயரினெல்லை




அன்றேநான் சொன்னனே  கேட்கவில்லை கைது
    ஆனபின்னர் கண்டோமே துயரினெல்லை
ஒன்றேதான் இதற்குவழி உறுதி! வெல்வோம் நாம்
    ஒன்றுபட்டு ஒருகுரலாய் ஒலிக்க சொல்வோம்!
நன்றேதான் நாம்கூடி திட்டமிடுவோம் ஏற்ற
    நாள்தன்னை வலைதன்னில் எட்டவிடுவோம்
என்றேநான் உறவுகளே தூண்டுகின்றேன் -செய்ய
    எவர்வரினினும் தலைவணங்கி வேண்டுகின்றேன்

யார்செய்தார் என்பதல்ல இந்தப்பணியே இதை
      இப்படியே விட்டாலே தொற்றும்பிணியே
சீர்செய்ய முயல்வார்க்கு கைகொடுப்போம் கூடி
    சிந்தித்து செயல்பட முடிவெடுப்போம்
பேர்பெறவா! அல்லயிது உரிமைக்காக்க-அறப்
     போராடி நாடிவரும் துன்பம்போக்க
தேர்தன்னை பலர்கூடி இழுத்தல்போல-உடன்
     திரளுங்கள் உறவுகளே நாளும்சால
                               புலவர் சா இராமாநுசம்


தருமி அவர்கள் தங்களுடைய வலைப்பூவில்(blog) கூறிஇருந்தார் அது அப்படியே அனைவருக்காகவும் அறிந்து கொள்ள கிழே அப்படியே தந்து உள்ளேன் அனைவரும் இந்த செய்தியை பதிவிடுவோம்,,,

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம்(book) எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.

Tuesday, November 6, 2012

மதிமிகு தமிழா எழுவாயா –நம் மானத்தை உரிமையைக் காப்பாயா



 எழுவாய்த் தமிழா எழுவாயா-அணையை
     இடித்த  பின்னர்  அழுவாயா
வழுவாய்ச் சொல்லியே துடிக்கின்றார்-நீர்
     வழங்கிட பொய்பல தொடுக்கின்றார்
தொழுவாய் எதற்கு வடநாடே-அவர்
    துணையால் நடப்பதே இக்கேடே
கழுவாய் எதிர்ப்புப் போராட்டம்-அதைக்
     கண்டவர் புத்தி மாறட்டும்

முல்லைப் பெரியார் அணைமட்டும்-அந்த
     மூடர்கள் கை யால் உடையட்டும்
எல்லைப் போரே நடந்திடுமே-நம்
    ஏக இந்தியா உடைந்திடுமே
தொல்லை மத்தியில் ஆள்வோரே-உடன்
     துடிப்புடன் விரைந்து தடுப்பீரே
இல்லை என்றால் பெரும்போரே-இங்கு
     ஏற்படும் பொறுப்பு ஆள்வோரே

திட்டம் இட்டே செய்கின்றார்-அவர்
    தினமும் பொய்மழை பெய்கின்றார்
கொட்டம் இனிமேல் செல்லாதே-தமிழன்
    குமுறும் எரிமலை பொல்லாதே
சுட்டால் தெரியும் நண்டுக்கே-எடுத்துச்
    சொன்னால் புரியா மண்டுக்கே
பட்டே அறிந்திடல் கேரளமே-நல்ல
     பண்பா ? அறித்திடு கேரளமே!

அனைவரும் ஒன்றாய் சேருகின்றார்-நம்
     அணையை உடைக்கக் கோறுகின்றார்
இனியென தமிழகம் திரளட்டும்-நம்
      எழுச்சியை உலகம் உணரட்டும்
தனியொரு புதுயுகம் தோன்றட்டும்-பின்
      தக்கதோர் பாடம் கற்கட்டும்
மனித நேயமே அற்றவர்கள்-பாபம்
      மனதில் நோயே உற்றவர்கள்

உதிரிப் பூவாய் கட்சிகளே-இங்கே
    உள்ளது சரியா கட்சிகளே
எதிரிகள் அனைவரும் ஒன்றாக-அங்கே
    இருப்பதைக் காண்பீர் நன்றாக
சதிபல அன்னவர் செய்கின்றார்-ஏற்ற
    சமயம் இதுவென முயல்கின்றார்
மதிமிகு தமிழா எழுவாயா –நம்
    மானத்தை உரிமையைக் காப்பாயா

               மீள்பதிவு

                                      புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...