Saturday, July 9, 2011

படமும் பாடலும்


ஆடிப்பிறப் பென்றே அடடா கொழுக்கட்டை
தேடிப்படம் போட்டீர் பணியார நல்தட்டை
நாடிப் பதம்பார்த்து நற்கவிதை சுவைசேர்த்தே
பாடிமுடித் தனிப்பின பணியாரம் தருவீரா
மூடித்திறந் தவாய் மூடாது காத்திருக்க
ஓடிவந்திடுவேன் ஒருவார்த்தை சொல்லவிட
வாடிப் போவேனா வற்றிவிட என்நாவும்
வடித்தாலும் முடித்தாலும் வற்றாதென் பாவே


புலவர் சா இராமாநுசம்

Friday, July 8, 2011

உருவாகும்தனி ஈழம் உறுதியாய் இரு

ஆடுபுலி ஆட்டமென சொலவார் இதனை
அழகான படமாக போட்டீரதனை
நாடுகெட்டு போகாமல் தடுக்க நாமே
நாளதோறும் உழைத்துத் தாமே
பாடுபட்டுப் பொருள்தேட முயலல் நன்றே
பரவாமல் ஊழல்தான் ஒழியஇன்றே
கேடுகெட்ட அந்நிலையே வேண்டாமெனற
கொள்கையிலே என்றும்நீ உறுதியாய் இரு

யாராண்டால் நமக்கென்ன எண்ணல் கேடே
இதனாலே கெட்டத்துதான் நமது நாடே
பாராண்டான் தமிழனெ சொல்லித் தானே
பாழாக ஈழத்தை விட்டோம் வீணே
சீராண்ட அத்தமிழர் இலட்சக் கணக்கில்
செத்தாரே நமக்குள்ளே வந்த பிணக்கில்
ஊரோடு ஒத்துப்போ பிதற்றல் வீணே
உருவாகும்தனி ஈழம் உறுதியாய் இரு

புலவர் சா இராமாநுசம்

Thursday, July 7, 2011

பணத்தைத் தேடி எடுப்பதற்கா

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும்
பணத்தைத் தேடி எடுப்பதற்கா
உள்ளம் தொட்டு சொல்வாரா-இங்கே
உரைப்பதை காதில் கொள்வாரா
வெள்ளிப் பணமே தினம்கேட்டே-பெற்றோர்
வேதனை தன்னை இப்பாட்டே
சொல்லில் விளக்க வாய்பாக-தலைப்பூ
சொல்லிய வார்ப்புக்கே முதல்நன்றி

தனியார் பள்ளிகள் முதலாளி-பாடம்
தந்திடும் 'ஆ'சிரியர்தாமே தெழிலாளி
இனியார் எவரும் பணம்தேட-பள்ளி
ஏற்றதாய் எண்ணம் மனதோட
கனிவாய் சொல்லல் இதுஒன்றே -தம்
கல்விப் பணியாம் அதுவென்றே
பிணியாய் ஆனதே இந்நாளில்=இப்படி
பிழைப்பும மறைவது எந்நாளில்

ஏழைகள் கல்வி கற்பதற்கே-இன்று
இருப்பது அரசுப் பள்ளிகளே
பேழையுள் பணமே உள்ளவர்கள்-தேடிப்
போவதே தனியார் பள்ளிகளே
கோழைகள் நடுத்தர குடும்பங்கள-படும்
கொடுமைகள் தமக்கோர் அளவில்லை
ஏழையும பேழையும் இல்லாதார்-பாபம
எதிர்த்து எதுவும சொல்லாதர்
எனவே
வாழவழியும அவர்க் குண்டா-கல்வி
வளர்க்கச் செய்திடும் அருந்தொண்டா
சூழும் சற்றே ஓய்வாக -இங்கே
சொன்னதை முற்றும் ஆய்வாக
பாழும் ஏழை பணக்காரர்-என்ற
பாகு பாடே குணக்கேடாம்
வீழும் கல்வி வளர்சிதான்-இது
வேண்டுமா தனியார் பள்ளிகளே

புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 6, 2011

என்றும் அன்புடன்

அன்பு நெஞ்சங்களே, நேற்றைய (என்) பதிவில் தம்பி கவி அழகன்
எழுதுதிய கருத்துரையில் வந்த வரி ஒன்று மறைந்து போன என்
துணைவியின் நினைவுகளை தூண்டி விட்ட தால் அவள் முதலாண்டு
நினைவு நாளில் நான் வடித்த கவிதை இந்த பதிவாகும்

என்றும் அன்புடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவாயா
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே

கட்டிய கணவண் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே
விட்டுப போனது சரிதானா
விதியே எனபது இதுதானா
மெட்டியை காலில் நான்போட
மெல்லிய புன்னகை இதழோட
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில முள்தைக்க
கொட்டும தேளாய் கணந்தோறும
கொட்ட விடமாய் மனமேறு்ம
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காணபதடி
செவ்வண் வாழ்ந்தோம ஒன்றாக
சென்றது ஏனோ தனியாக

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்து சென்றுவிடு
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக
இங்கே நானும தனியாக
இருத்தல் என்பது இனியாக
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி
செய்வாயா--

                       புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 5, 2011

ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே

    ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப் பாவே
    தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத் தில்
    தானாய் வந்தது அலை போல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலை போல
    வானாய் விரிந்திட சிந்தனை கள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனை கள்  

    உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந் தாச்சே
    எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்  பூவே
    போதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலை பெற்றேன்
    பொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்த துவே

    பாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதி டுவேன்
    வீதியில் ஒசைவந்த வுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்தி டிமே
    தேதி கேட்டால தெரி யாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரி யாதே
    காதில் அழைப்பது விழுந் தாலும-என்
    கவன மதிலே செல்வ தில்லை

    படுத்த படிய சிந்திப் பேன்-என்
    பக்கத் தில் பேனா தாளுமே
    தொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறை  வில்லை
    அடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணா தாம்
    எடுத்த பாடல் முடியா தாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயா தாம்

    அப்பா  வேதனை ஆம்  அப்பா-தினம்
    ஆனது என் நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப் பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப் பாவே
    ஒப்பா யிருந்ததே என் னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனை பெரு வெள்ளம்
    இப்பா போதும் முடி யப்பா-சோர்வு
    எழவே தொடரா படி யப்பா

              புலவர் சா இராமாநுசம்

Monday, July 4, 2011

விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்

எண்ணில்லா புதைகுழிகள் ஈழ மண்ணில்-எம்
     இதையத்தை இரணமாக்க ஆறாப் புண்ணில்
மண்ணெல்லாம் அள்ளிவந்து அதனமேல் தூவி-அதை
      மேன்மேலும் கிளறிவிடும் செயலை மேவி
கண்ணில்லா சிங்கள கயவர் நாளும்-அங்கே
     காட்டுகின்ற அடக்கமுறை வெறியாய் மூளும்
விண்ணெல்லாம் உலவுகின்றார் ஈழ மறவர்-வந்து
     விரைவாக உமக்கேற்ற கூலி தருவர்

அற்பனுக்கு வந்திட்ட வாழ்வு தானே-இன்று
      அடந்துள்ளாய் பகசேவே அழிவாய் வீணே
பொற்பனைய ஈழத்தை பொசிக்கி விட்டாய்-நீ
       புற்றுக்குள் கைவிட்டு பாம்பை தொட்டாய்
கற்பனையாய் எண்ணாதே கடியும் படுவாய்-தேடி
      காலன்தான் வருகின்றான்  மடிந்தே விடுவாய்
சொற்பம்தான் இடைபட்ட காலம் அதுவே-என
      சொலகின்ற புலவனது சாபம் இதுவே


எத்தனையோ உயிர்தன்னை பறித்தாய் நீயே-ஐ.நா
      இயம்பியதோர் கணக்கதனை தாண்டும் மெய்யே
சித்தமெலாம் துயராலே பற்றி எரியும்-அந்த
      சிங்களமே உன்னாலே முற்றும் அழியும்
இத்தரையில் கொடுங்கோலர் வாழ்ந்த தில்லை-வரும்
      எதிர்காலம் தெளிவாக உணர்த்தும் ஒல்லை
புத்தமதம் பின்பற்றும் நாடா ? உமதே-அவர்
      போதனையை அறிவாயா வேண்டாம் மமதே

புலவர் சா இராமாநுசம்

Sunday, July 3, 2011

உண்மையில் அரசாள தேவை ஆகும்

காட்டைத்  திருத்தி  நல்கழனி  ஆக்கி-தினம்
       காலையும்  மாலையும்  சென்று  வந்தோன்
வீட்டை  மகிழ்சியில்  ஆழ்த்தி  டவே-தை
       விரைகுது  பொங்கலோ  பொங்க  லடா
கூட்டாளி  மாட்டுக்கும்  பொங்க  லிட்டு-கை
       கும்பிட  வந்திடும்  தைத்  திருநாள்
பாட்டாளி  போற்றிடும்  மேதினம்  போல்-இந்த
       பாரெல்லாம்  கொண்டாடச்  செய்திடு  வோம்

வந்தது  வந்தது  பொங்க  லடா-உழவர்
       வாழ்வினில்  வறுமையே  தங்க  லடா
தந்தது  உணவன்றோ  உயிர்கள்  வாழ-நாம்
      தந்ததோ  அவரில்லம்  துயரம்  சூழ
வெந்தது  தானே  உள்ள  நிலை-அவர்
      வேதனை  நீக்குவார்  யாரும்  இலை
சிந்தனை  உடன்செய்ய  வேண்டு  மடா-எனில்
      செத்து  மடிவது  உறுதி  யடா                

உழுது  உழுது  அலுத்த  வனே-நாளும் 
      உதிரிப்  பூவாக  ஆகிவிட்  டான்
அழுது  அழுது  வடித்த  கண்ணீர்-நீர்
      ஆவி  ஆனது  வெம்மை  யிலே
தொழுது  வணங்க  வேண்டி  யவன்-கை
      துவளவும்  நாளை  மடங்கி  விடின்
பழுது  வந்திட உலக  மெங்கும்-அழி
     
பசியோடு  பஞ்சமே  என்றும் ஓங்கும்

அல்லும்  பகலுமே  பாடு  பட்டே-உழவன்
      அயராது  சேர்த்திட்ட  பொருளின்  விலை
சொல்லும்  நிலைமட்டும்  அவனுக்  குண்டா-என
       சொல்லுங்கள்  யாரேனும்  இன்று  வரை
கொல்லும்  பசிப்பிணி  மருத்  துவனே-அவன்   
       குமுறும்  உள்ளத்தை  அறிந்திடு  வீர்
ஒல்லும்  வழிதன்னை  காண்பது  தான்–உடன்
       உண்மையில்  அரசாள  தேவை  ஆகும்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...