Friday, June 24, 2016

முகநூல் பதிவுகள் !

தென்னை மரத்தில் ஒருத்தன் ஏறி தேங்காய் பறிக்க முயல காவல்காரன் ஓடி வருவதைக் கண்டு அவசரமாக  இறங்கினான், காவல்காரன் கேட்டான் ! ஏண்டா மரத்திலே ஏறின ! திருடன் பதில் சொன்னான்! புல் பிடுங்க! என்றான் காவல்காரன், ஏண்டா தென்னை மரத்திலா புல்லிருக்கும் என்று கேட்க , இல்லை! அதான் இறங்கி வரேன்னு, திருடன் பதில் சொன்னான்! இது, எப்படி இருக்கு! இப்போ நாட்டு நடப்பைப் பார்த்தேன்! எழுதினேன்!


ஒரு குடும்பத்தலைவி , தங்கள் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்தும் இல்லத்திற்கு வரும் உறவினர்களை( தன் வழியும் கணவன் வழியும்) வரவேற்று வேறுபாடு காட்டாமல் விருத்தோம்பியும் கணவனோடு பெற்ற மக்களையும் பேணி பாதுகாத்து தினமும் இறைவனைத் தொழுபவளாக் இருக்க வேண்டும்

கடித்தது நாயா இருந்தால் கையில் கிடைத்ததை கொண்டு விரட்டி அடிக்கலாம்! கடித்தது செருப்பா இருந்தா ? என்ன செய்வது! இப்படித் தான் , நம் வாழ்கையிலும் பல செயல்கள் நடக்கின்றன! அவற்றுள் நாம் ஒரு சில வற்றுக்கு மட்டுமே எதிர் வினை செய்ய முடியும்! சிலவற்றுக் பொறுத்து அமைதி காக்கத் தான் வேண்டும்!

அறிஞர் அண்ணா அவர்கள் மாநில சபையில் பேசும்போது . மாண்பு மிகு பாரதப் பிரதமர் நேரு அவர்களிடம் , நீங்கள் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் போன்றவர், நானோ கெட்டிக் கிடக்கின்ற செங்கல்லைப் போன்றவன் , என்று, தன்னடக்கத்தோடு குறிப்பிட்டார்! இன்று அவர் பெயரைக் கொண்டும் ,கொள்கைவழி நின்றும் நடப்பதாகச் சொல்லும் ஆளும் கட்சியும் ,எதிர் கட்சியும் .குறைந்த அளவேனும் அவர் காட்டிய கண்ணியத்தை அவையில் கடை பிடித்து நடக்க, ஓட்டளித்த மக்கள் எதிர் பார்க்கிறார்கள்!!!?

கச்சத் தீவு பிரச்சனையில் இரு கட்சிகளும் வீண் விதண்டா வாதம் செய்து சட்டமன்ற நேரத்தைப் பாழாக்குவதில் எவ்வித பயனும் இல்லை !இனி , அதனைத் திரும்ப , பெறும் வாய்ப்பு மிகவும் குறைவே! உடன் ஆற்ற வேண்டிய பணி, மீனவரின் வாழ்வாதாரம் வளம்காண உரிய வழிதனை , என்ன வென ஆய்வதே உங்கள் இருவரின் செயலாக வேண்டும்! செய்வீர்களா!?

புலவர்  சா  இராமாநுசம்
 

Wednesday, June 22, 2016

முகநூல் பதிவுகள்!



உறவுகளே!
யார் குற்றவாளி !!?
நாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும் இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்
இந்த இருவரில் யார் குற்றவாளி?

உறவுகளே நல்ல நட்பு எப்படி இருக்கும்!!?
இடுப்பில் கட்டிய வேட்டி நழுவும்போது கை தானாகவே ஓடி அதனை நழுவாமல் பற்றிக் கொள்வதைப் போல, ஒருவன் தன்னுடைய நண்பனுக்குத் துன்பம் வரும்போது தானாகவே ஓடிச் சென்று உதவி துன்பத்தை நீக்குவதாக இருக்க வேண்டும்!

தேனை உண்ணத்தான் வண்டு பூ வைத்தேடி வருகிறது என்பது பூவுக்குத் தெரியாவிட்டாலும் கவலையில்லை! ஆனால் பூவையர்க்குத் தெரியாவிட்டால் ...! விளைவு விபரீதம் தானே!

உறவுகளே!
யார் குற்றவாளி !!?
நாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதும் தரவில்லை என்றால் அலைகழிக்க முயல்வது நடைமுறையாகவும் பதி செய்ய வந்தவர்களும், உடனே முடிக்க தாங்களே முன்வந்து இலஞ்சம் தருவதும் இன்றும் காணுகின்ற காட்சி ஆகும்
இந்த இருவரில் யார் குற்றவாளி?

வண்டியில் பயணம் போகிறோம் ! பாதையில் நான்கு வ ழி சந்திப்பு வருகிறது நடுவிலே ஒரு கம்பம் !அது நான்கு திசைகளையும் காட்டுவதோடு அவ் வழி எந்த ஊருக்குப் போகும் என்பதையும் காட்டுகிறது! நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே போக நாம்தானே முனைய வேண்டும் அதுபோல நம் வாழ்க்கைப் பாதையிலும் சிலபேர் கைகாட்டி மரமாகத்தான் இருப்பார்கள்! இருக்க முடியும்! எனவே நாம்தான் முடிவு செய்ய வேண்டும்

முதல்நாளே ஆரம்பமாகி விட்டதா அமளி !? சட்டமன்றத்தில் ! இனி வரும் ஐந்தாண்டுகளும் இப்படித்தான் போகுமா! கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுவதுதானே முறை! எதற்காக உறுப்பினர் திருமிகு செம்மலை அவர்கள் சமஸ்கிரதம் பற்றி தேவையில்லாமல் பேசி பிரசன்னையை உருவாக்க வேண்டும்!
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதனை கட்டுப் படுத்த கனிவோடு வேண்டுகிறேன்!

புலவர்  சா  இராமாநுசம்

Sunday, June 19, 2016

முகநூல் பதிவுகள்!


அன்பே! உன் பெயர்தான் அன்னையா!!!!?
கூவத்தையும் காவிரியையும் ஒன்றாக எண்ணி ஏற்றுக் கொள்ளும் கடல்போல, தன் ,மகனோ மகளோ நல்லவர்களோ தீயவர்களோ என்று பாராமல் ஏற்றுக் கொள்ளும் மனம் படைத்தவளே   உன்பெயர்தான் அன்னையா!!!?

ஓர் அரசு மக்களுக்குப் எப்போதும் நீதிநெறியோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும்! அப்படி இருந்தால், அதுவே(ஆட்சி முறை) அரசைக் காப்பாற்றும்! (குறள்கருத்து)

பணம் பத்தும் செய்யும் என்பார்கள்! அதில் ஒன்று , ஆளவும் செய்யும் என்பது புலனாகிறது

எப்படியோ, ஆளும் கட்சியும் பலமான எதிர்க் கட்சியும், என இரண்டு அணிகள் உருவாகி விட்டன ! வரவேற்போம்! ஆனால் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு சட்ட மன்றத்தை போர்க்களமாக ஆக்காமல் சனநாயக முறைப்படி நடத்திச் செல்லுமாறு இருதரத்தாரையும், நடக்க வேண்டுகிறோம் .மேலும், இதனை மக்கள் அறிய அவை நிகழ்ச்சிகளை அப்படியே நேராக தொலைக்காட்சியில் அஞ்சல் செய்தால் , தவறு செய்வது யாரென்று மக்களும் அறிவர்! செய்வீர்களா!

ஊழல் ஊழல் என்று சொல்றாங்களே எது ஊழல்! ஊழலே செய்யாத மனிதர் உலகில் யாருண்டு!!? ஒருவரைக் காட்ட முடியுமா ! தான் செய்வது ஊழலே என்று உணராமலேயே பலரும் செய்வதும் அதுவே மற்றவர் செய்யும் போது ஊழலாக தெரிவதுதான் ஊழல் என்று நினைப்பதுதான் இன்று மனித சமுதாயத்தின் இயல்பாகப் போய்விட்டதே ! கள்ளமார்க்கட்டில் டிகட் வாங்கி சினிமா பார்ப்பதேகூட ஊழலுக்குப் போடப்படும் விதையல்லவா!!!? யாரேனும் இதனை எண்ணிப் பார்த்த துண்டா?

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...