Wednesday, December 24, 2014

என் வெளிநாட்டுப் பயணம் பற்றிய அறிவிப்பு!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்!
நான்  இன்று இரவு (புதன்) மணிலா போகிறேன்! என் ,மகளும் பேரனும் உடன் வருகிறார்கள்! அங்குதான்என் மருகன் இருக்கிறார் ஒரு வாரம் வெளிநாட்டில் தங்கி விட்டு திரும்பியதும் மீண்டும் உங்களோடு
தொடர்பு கொள்வேன் உங்கள் வாழ்த்தும் அன்பும் தேவை! நன்றி
புலவர் சா இராமாநுசம்

Monday, December 22, 2014

என் முகநூல் பதிவுகள்!




ஒரு துறவியைப் பார்க்க,தந்தையோ, மற்ற உறவினரோ எவர் வந்தாலும் , அவர்கள் தான் முதலில் துறவியை வணங்க வேண்டும் அதன்பின்னர் துறவி வணங்கலாம் . வந்தது தாய் என்றால் துறவிதான் முதலில் வணங்கியாக வேண்டும் இது நியதி!

 தமிழன் எவருக்கும் தாழ்ந்தவன் அல்ல
தமிழன் எவரையும் தாழ்த்துபவனல்ல
அடங்கத் தெரிந்தவன் தமிழன்
அடக்கவும் தெரிந்தவன் தமிழன்
அன்புக்கே அடிபணிவான் தமிழன்
அதிகாரத்திற்குக் கட்டுப்பட மாட்டான்

காவல் தானே பாவையர்க்கு அழகு
பெண்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்வதுதான் அவர்களுக்கு அழகாகும்.
கீழோர் ஆயினும் தாழ உரை
தன்னைவிடத் தாழ்ந்தவராயினும் அவர்களிடம் அடக்கமாகப் பேசு

வாழ்க்கையில் ஒருவனைப் பற்றி முழுதும் அறியாத நிலையில், அவனிடம் நம்பிக்கை வைப்பதும் தவறு! அதேபோல ஒருவனை முழுதும் ஆய்ந்து தெளிந்த பின்னர் அவனைப் பற்றி சந்தேகப்படுவதும் தவறு ! இவை, இரண்டு குணங்களும் நம்மிடை இருக்குமானால் என்றும் தீர்க்க இயலா துன்பமே தரும்!

நேற்று என்பது! இறந்தகாலம் நடந்த நிகழ்வுகள் நல்லதோ , கெட்டதோ நினைவில் கொள்வோம்! இன்று என்பது நிகழ்காலம் செய்வன எண்ணிச் செயல் படுத்துவோம்! நாளை என்பது எதிர்காலம்!
நேற்றும் இன்றும் செய்ததை எண்ணி திட்டமிடுவோம்! இவை வாழ்கையில் வெற்றிபெற வழிவகுக்கும்!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...