Wednesday, November 18, 2015

மாண்பு மிகு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்!


உறவுகளே வணக்கம்!
நான் முன்பே எழுதியதைப் போல இவ்வளவு மழை பெய்தும் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரிமட்டும் முழு அளவினை
எட்டவில்லை மற்ற ஏரிகள்( சோழவரம், பூண்டி, செம்பரம் பாக்கம்) நிரம்பியதோடு உபரி நீர் வெளியேறி வெள்ளச்சேதம் ஏற்படத்தியுள்ள செய்திகளை அனைவரும் அறிவீர்! இதனால் தெரிவது புழல் ஏரிக்கு நீர் வரும் வழிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளநிலைமை உள்ளங்கை நெல்லிக்கனி என்பதுபோல் தெளிவாகத் தெரிகிறது
ஆகவே எதையும் துணிவோடு செய்யக்கூடியவர் என பெயர் பெற்ற நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள், பழைய கோப்புகளை எடுத்து ஆய்வு செய்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும், யாரானாலும் எந்த கட்சி ஆனாலும் தயவு காட்டாமல் போர்கால அடிப்படையில் உடனடி அகற்ற நடவடிக்கையை எடுக்குமாறு வேண்டுகிறோம் இதுதான் உரிய தருணம் நாள் தள்ளிப் போனால் ஆறின சோறு ஆகிவிடும் மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம்! செய்வீகளா!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...